உத்தரப் பிரதேச மாநிலத்தின் அலிகார் நகரத்தில் இஸ்லாமிய வாலிபர் ஒருவருடன் ஹிந்துப் பெண் தேநீர் அருந்தியுள்ளார்.
அப்போது அங்கு வந்த உள்ளூர் பாஜக தலைவர் சங்கீதா வர்ஷினி என்பவர் இச்சம்பவத்தை கண்டித்துள்ளார். மேலும், அந்த பெண்ணின் கன்னத்தில் இருமுறை அறைந்துள்ளார்.
மேலும், ஹிந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இனியாவது வித்தியாசம் தெரிந்துகொள் என அவரை எச்சரித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் அந்த இஸ்லாமிய வாலிபர், பொது இடத்தில் அநாகரீகமாக நடந்துகொண்ட காரணத்தால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
இதுகுறித்து பாஜக தலைவர் சங்கீதா கூறியதாவது:
எனக்கும் இஸ்லாமியர்களுக்கும் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், ஹிந்துப் பெண்களை குறிவைத்து மதமாற்றம் செய்வதும், ஜிகாதிகளாக்குவதும் இங்கு அதிகரித்துள்ளது. எனவே அந்தப் பெண்ணை எச்சரித்தேன் என்றார்.
இந்த விவகாரத்தை பூதாகரமாக்க விரும்பவில்லை. எனவே இதனை அப்படியே விட்டுவிடுமாறு அந்தப் பெண்ணின் தகப்பனார் கூறியதாக அப்பகுதி காவல்துறை ஆய்வாளர் தெரிவித்தார்.