தேரா சச்சா சௌதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். இவர் தனது இரண்டு பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கடந்த 2002-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ மேற்கொண்டது.
இந்நிலையில், குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இரண்டு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபிக்கப்பட்டது. எனவே 376 & 506 குற்றப்பிரிவுகளின் அடிப்படையில் இரு வழக்குகளிலும் தலா 10 வருடங்கள் என 20 வருடங்களுக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
இந்த குற்ற வழக்குகளுக்கு அபராதமாக ரூ.30 லட்சம் விதிக்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட 2 பெண்களுக்கும் தலா ரூ.14 லட்சம் வழங்க வேண்டும் என்று தண்டனை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், சிபிஐ சிறப்பு நீதிமன்ற தண்டனையை ரத்து செய்யக்கோரி பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களில் தேரா சச்சா சௌதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் தரப்பில் திங்கள்கிழமை மேல்முறையீடு செய்யப்பட்டது.