புது தில்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸை குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கய்ய நாயுடு இன்று நிராகரித்தார்.
இது குறித்து அவர் அளித்த விளக்கத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என்பதாலேயே, எதிர்க்கட்சிகள் அளித்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ் குறித்து சட்ட வல்லுநர்கள் மற்றும் அரசியல் சாசன வல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்த பிறகே, நோட்டீஸ் நிராகரிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. மேலும், இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடனே எதிர்க்கட்சித் தலைவர்கள் நோட்டீஸ் அளித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.