2ஜி வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோரின் விடுதலைக்கு எதிரான அமலாக்கத்துறையின் வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2ஜி முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்பட 14 பேரை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிராக தில்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை, சிபிஐ ஆகியவை சார்பில் மேல்முறையீட்டு மனுக்கள் கடந்த மார்ச் மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மனு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, மாநிலங்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை தில்லி உயர்நீதிமன்றம் நவம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.