தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் சிறுநீரக தொற்று மற்றும் குறைந்த சிறுநீர் வெளியீடு காரணமாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 9 வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் மருத்துவ குழுவும் சிகிச்சையளித்து வருகிறது.
இந்நிலையில் இன்று எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் எய்ம்ஸ் மருத்துவமனையில் 9 வாரங்களாக சிச்கிசை பெற்று வருகிறார் கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. சுவாசக் கருவி மற்றும் உயிர் காக்கும் மருத்துவ உபகரணங்களுடன் அவருக்கு தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டுவருவதாக தெரிவித்துள்ளது.
பிரதமர் நலம் விசாரிப்பு:
இந்நிலையில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை சென்ற பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பியூஷ்கோயல் மற்றும் ஸ்மிருதி இராணி ஆகியோர் வாஜ்பாய் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.