72-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தில்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு புதன்கிழமை உரையாற்றினார்.
இந்த இனிய நாளில் நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள் என்று பிரதமர் மோடி முதலில் தெரிவித்தார். அதன்பிறகு அவர் ஆற்றிய நீண்ட உரையில் தெரிவித்த சில அம்சங்கள்.
பாரதியார் கவிதையை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி,
‘எல்லாரும் அமரநிலையை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்கு அளிக்கும் என கூறியுள்ளார் பாரதியார்’ என்றார்.