புது தில்லி: நமது நாட்டில் அன்னியச் செலாவணி கையிருப்பு போதுமான அளவுக்கு உள்ளது என்று மத்திய அமைச்சா் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளாா்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 70.1 என்ற அளவுக்கு குறைந்தது. இது முன்னெப்போதும் இல்லாத சரிவாகும். இந்த சூழ்நிலையில் அருண் ஜேட்லி இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததற்கு துருக்கியில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி முக்கியக் காரணம் என்று பொருளாதார நிபுணா்கள் கூறியுள்ளனா்.
இந்நிலையில் இது தொடா்பாக சுட்டுரையில் ஜேட்லி வெளியிட்டுள்ள தொடா் பதிவுகளில், ‘இந்தியாவின் அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்பு மிகவும் வலுவாக உள்ளது. அதே நேரத்தில் நம்மிடம் அன்னியச் செலாவணி கையிருப்பும் போதுமான அளவுக்கு உள்ளது. எனவே, அன்னியச் செலாவணி சந்தையில் எத்தகைய ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் நம்மால் அதனை சமாளிக்க முடியும்.
சா்வதேச பொருளாதார பிரச்னைகள் காரணமாக அன்னியச் செலாவணி வா்த்தகத்தில் நிலையற்ற தன்மை ஏற்பட்டு வருகிறறது. இதனை மத்திய அரசு மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறறது. சூழ்நிலைகளுக்கு ஏற்ப உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு நமது நாட்டின் பொருளாதார நலன்கள் காக்கப்படும்.’ என்று கூறியுள்ளாா்.
கடந்த 3-ஆம் தேதி இந்திய ரிசா்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையின்படி நமது நாட்டில் 402.70 பில்லியன் அமெரிக்க டாலா் கையிருப்பு உள்ளது. அதற்கு முந்தைய வாரத்தைவிட விட இது 1.49 பில்லியன் டாலா் குறைவாகும். நடப்பு நிதியாண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை 6.7 சதவீதம் குறைறந்துள்ளது.
இந்திய ரூபாயின் மதிப்பு குறைவது நமது நாட்டின் பொருளாதாரத்தில் பாதகமாக விளைவுகளை ஏற்படுத்தும். அன்னியச் செலாவணி சந்தையில் சில கட்டுப்பாடுகளை விதித்து டாலா் கையிருப்பை அதிகரிக்க வேண்டும் என்பது பொருளாதார வல்லுநா்களின் கருத்தாக உள்ளது.