வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி: பொதுமக்கள் ஆரவாரம்

வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் இந்திய ராணுவத்தை உற்சாகப்படுத்தும் விதமாக ஆரவாரம் செய்தனர்.
வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சி: பொதுமக்கள் ஆரவாரம்

வாகா எல்லையில் தேசிய கொடி இறக்கும் நிகழ்ச்சியில் பொதுமக்கள் இந்திய ராணுவத்தை உற்சாகப்படுத்தும் விதமாக ஆரவாரம் செய்தனர்.

தேசபக்தி முழக்கங்களை எழுப்பிய பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.

ஒவ்வொரு தினமும் மாலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாஹா எல்லையில் இந்தியா, பாகிஸ்தான் நாட்டு தேசியக் கொடிகளை இறக்கும் நிகழ்வினை காணவும், வீரர்களின் சிறப்பான அணிவகுப்பைக் காணவும், இரு நாட்டு மக்களும் ஆர்வமுடன் கூடுவார்கள். 

இந்நிலையில், இந்திய சுதந்திர தினத்தையொட்டி கொடி இறக்கும் நிகழ்ச்சியில் இந்திய வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பை பொதுமக்கள் உற்சாகமாக கண்டு ரசித்து ஆரவாரம் செய்ததுடன், ராணுவத்தினரை உற்சாகப்படுத்தும் விதமாக தேசபக்தி முழக்கங்களுடன் கரகோஷம் எழுப்பி மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இன்றைய தினத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த கொடி இறக்கும் நிகழ்ச்சியை காண குவிந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com