கேரளாவில் அனைத்து கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன: முதல்வர் பினராயி விஜயன் 

கேரளாவில் அனைத்து கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 
கேரளாவில் அனைத்து கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன: முதல்வர் பினராயி விஜயன் 

கேரளாவில் அனைத்து கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்து வரும் மழையால் 14 மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. மேலும் இரண்டு நாட்களுக்கு கேரளாவில் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் மீட்பு நடவடிகைகள் முழுவீச்சில் நடைபெறு வருகின்றன. 

இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது,
வெள்ளத்தால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கிராமங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதமர், உள்துறை அமைச்சர் தேவையான உதவிகள் அளிப்பதாக உறுதி அளித்துள்ளனர். விரைவில் கூடுதல் ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடவுள்ளன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com