கேரள மக்களுக்கு உதவ திருமணத்தை ஒத்திப்போட்ட மருத்துவருக்கு ஒரு சல்யூட்

கேரளாவில் ஏற்பட்ட பெரும்  மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் நிவாரண முகாம்களில் உணவு, உடை போன்றவற்றோடு மருத்துவர்களின் தேவையும் உள்ளது.
கேரள மக்களுக்கு உதவ திருமணத்தை ஒத்திப்போட்ட மருத்துவருக்கு ஒரு சல்யூட்


கேரளாவில் ஏற்பட்ட பெரும்  மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் நிவாரண முகாம்களில் உணவு, உடை போன்றவற்றோடு மருத்துவர்களின் தேவையும் உள்ளது.

கடந்த சில நாட்களாக வெள்ளத்தில் சிக்கியவர்களும், மழையில் சிக்கி, உணவின்றி தவித்தவர்களும் உடல் அளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு மருத்துவர்களின் உதவியும், மருந்துகளும் மிக அத்தியாவசியமாக உள்ளது.

இந்த நிலையில், ஆகஸ்ட் 19ம் தேதி தனக்கு நடக்கவிருந்த திருமணத்தை ஒத்திப்போட்டுவிட்டு, நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார் மருத்துவர் அருண்.

தன்னுயிரை பொருட்படுத்தாது மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் படை வீரர்கள் மற்றும் தன்னார்வலர்கள், தேவைப்படும் பொருள், உடைமைகளைக் கொடுத்து உதவுவோருக்கு நிகராக இந்த இளைஞர் அருணின் தொண்டுக்கும் ஒரு சபாஷ் சொல்லியே ஆக வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com