கேஜரிவால் மீதான தாக்குதல்: ஆம் ஆத்மியின் திட்டமிட்ட சதி: மனோஜ் திவாரி குற்றச்சாட்டு

கேஜரிவால் மீதான தாக்குதல்: ஆம் ஆத்மியின் திட்டமிட்ட சதி: மனோஜ் திவாரி குற்றச்சாட்டு

தில்லி முதல்வர் கேஜரிவால் மீது நடத்தப்பட்ட மிளகாய்ப் பொடித் தாக்குதல், ஆம் ஆத்மி தலைவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும் என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார். 

தில்லி முதல்வர் கேஜரிவால் மீது நடத்தப்பட்ட மிளகாய்ப் பொடித் தாக்குதல், ஆம் ஆத்மி தலைவர்களால் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகும் என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார். 

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் மீது அண்மையில் தில்லி தலைமைச் செயலக வளாகத்தில் மிளகாய்ப் பொடி வீசித் தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக தில்லி நரேலாவைச் சேர்ந்த அனில் குமார் சர்மா (40) தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், தாக்குதல் நடத்திய அனில் குமார் சர்மா, ஆம் ஆத்மி தலைவர்களின் ஏற்பாட்டிலேயே கேஜரிவால் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக தில்லியில் வியாழக்கிழமை அவர் கூறியதாவது:  அனுதாப வாக்குகளைப் பெறுவதற்காக, ஆம் ஆத்மித் தலைவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, முதல்வர் கேஜரிவால் மீது மிளகாய்ப்பொடி தாக்குதல் நடத்தியதாக தாக்குதல் நடத்திய  அனில் குமார் சர்மா ஒப்புக் கொண்டுள்ளார் என்று நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. 

இதன் மூலம் வாக்குகளைப் பெற ஆம் ஆத்மியினர் எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதைக் காட்டுகிறது. இது தொடர்பாக தில்லி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com