மகாராஷ்ட்ராவில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி மேடையிலேயே மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்ட்ரா மாநிலம், அகமத் நகரில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டார்.
அப்போது மேடையில் இருந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.