ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் சாலையில் கண்டெடுக்கப்பட்ட விவகாரத்தில் 2 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 200 சட்டப்பேரவை தொகுதிகளில், 199 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நேற்று (வெள்ளிக்கிழமை) தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து, பாரன் மாவட்டத்தில் உள்ள கிஷான்கன்ஜ் தொகுதிக்கு உட்பட்ட ஷாஹாபாத் பகுதியில் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரம் ஒன்று சாலையில் கிடந்துள்ளது.
இதையடுத்து, இந்த சம்பவத்துக்கு தொடர்புடைய அப்துல் ரஃபீக் மற்றும் பத்வாரி நவல் சிங் என 2 அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த உத்தரவை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்தனர்.