சத்தீஸ்கரில் பாஜக-வுக்கு ஏற்பட்ட தோல்விக்கு முழுப்பொறுப்பேற்பதாக அம்மாநில முன்னாள் முதல்வர் ரமண் சிங் தெரிவித்துள்ளார்.
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் செவ்வாய்கிழமை நடைபெற்று வருகிறது. இதில் சத்தீஸ்கர் தொகுதியில் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து 3 முறை ஆட்சியில் இருந்த பாஜக தோல்வியை தழுவியது. எனவே காங்கிரஸ் அங்கு மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், சத்தீஸ்கரில் பாஜக-வுக்கு ஏற்பட்ட தோல்வியை அடுத்து அம்மாநில முதல்வர் பதவியை ரமண் சிங் ராஜிநாமா செய்தார். பின்னர் தேர்தல் முடிவுகள் குறித்து அவர் கூறியதாவது:
என்னுடைய ராஜிநாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பிவிட்டேன். சத்தீஸ்கரில் பாஜக-வுக்கு ஏற்பட்ட தோல்விக்கு முழுப் பொறுப்பேற்கிறேன். தற்போது எதிர்கட்சியாகவும் திறம்பட செயல்படுவேன், தொடர்ந்து மாநில வளர்ச்சிக்காக போராடுவேன் என்றார்.