தெலங்கானாவில் டிஆர்எஸ்: சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து

தெலங்கானாவில் டிஆர்எஸ்: சந்திரசேகர ராவுக்கு சந்திரபாபு நாயுடு வாழ்த்து

தெலங்கானாவில் அரிதிப் பெரும்பான்மையுடன் முன்னிலை வகித்து வரும் டிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். 


தெலங்கானாவில் அரிதிப் பெரும்பான்மையுடன் முன்னிலை வகித்து வரும் டிஆர்எஸ் கட்சித் தலைவர் சந்திரசேகர ராவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. இதில், தெலங்கானாவில் சந்திரசேகர ராவின் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி 119 தொகுதிகளில் 80-க்கும் மேலான தொகுதிகளில் அரிதிப் பெரும்பான்மையுடன் முன்னிலை வகிக்கிறது. எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ், தெலுங்கு தேசம் கூட்டணி கட்சிகள் பின்னடைவை சந்தித்துள்ளன.  

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. மத்தியப் பிரதேசத்தை பொறுத்தவரை அரைமணி நேரத்துக்கு ஒரு முறை காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி முன்னிலை வகித்து வருகின்றன. மிஸோரமில் மிசோ தேசிய முன்னணி கட்சி ஆட்சியை பிடிக்கவுள்ளது. 

இந்நிலையில், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 5 மாநில தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், அவர் தெலங்கானாவில் வெற்றி பெறும் சந்திரசேகர ராவுக்கும் வாழ்த்துகளை தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com