தேவையற்றவர்களை நீக்கிய வாக்காளர்களின் தைரியம் பாராட்டுதலுக்குரியது: உத்தவ் தாக்ரே

அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி என்பது சாதாரணம். அந்த வகையில் இந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். 
தேவையற்றவர்களை நீக்கிய வாக்காளர்களின் தைரியம் பாராட்டுதலுக்குரியது: உத்தவ் தாக்ரே

5 மாநில தேர்தல் முடிவுகள் தொடர்பாக சிவ சேனை கட்சித் தலைவர் உத்தவ் தாக்ரே செவ்வாய்கிழமை கூறியதாவது:

பேரவைத் தேர்தல் நடைபெற்ற இம்மாநிலங்களில் வாக்குப்பதிவு இயந்திரம், பணப்பட்டுவாடா மற்றும் இதர தொல்லைகளுக்கு மத்தியில் ஒரு மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தியுள்ளனர். எதிர்வரும் வினைகள்  குறித்து எவ்வித கவலையுமின்றி, மக்கள் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வாக்களித்துள்ளனர். 

அரசியல் கட்சிகளுக்கு வெற்றி, தோல்வி என்பது சாதாரணம். அந்த வகையில் இந்த தேர்தலில் வெற்றிபெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டும். குறிப்பாக இந்த தேர்தலில் தேவையற்றவர்களை நீக்கிய வாக்காளர்களின் தைரியம் பாராட்டுதலுக்குரியது என்று தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com