மோசமான நாட்கள் போய்விடும்.. ராகுல் காந்தி வந்து கொண்டிருக்கிறார்: நவ்ஜோத் சிங் சித்து

மோசமான நாட்கள் விரைவில் போய்விடும், ராகுல் காந்தி வந்து கொண்டிருக்கிறார் என்று பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.
மோசமான நாட்கள் போய்விடும்.. ராகுல் காந்தி வந்து கொண்டிருக்கிறார்: நவ்ஜோத் சிங் சித்து


புது தில்லி: மோசமான நாட்கள் விரைவில் போய்விடும், ராகுல் காந்தி வந்து கொண்டிருக்கிறார் என்று பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் சத்தீஸ்கர் மற்றும்  ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இது குறித்து பஞ்சாப் அமைச்சரும், சமீபத்தில் பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்தவருமான நவ்ஜோத் சிங் சித்து, மோடி சொல்லும் நல்ல நாள் வரும் என்ற வசனத்தையே சற்று மாற்றி, மோசமான நாட்கள் இனி ஓடிவிடும், ராகுல் காந்தி வந்து கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.

மேலும், ராகுல் காந்தி நரேந்திர மோடியை வீழ்த்துவார். இதனை மக்கள் பார்ப்பார்கள். மாநிலத் தேர்தல் முடிவுகள் எங்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளன. வாக்காளர்கள் அதற்கான அடித்தளத்தை அமைத்துள்ளனர். அனைத்து வழிகளும் செங்கோட்டையை நோக்கியே உள்ளன என்றும் அவர் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com