நரேந்திர மோடி அரசின் முடிவு ஆரம்பமாகியுள்ளதாக பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் செவ்வாய்கிழமை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் தான் நாடு முழுவதும் தற்போது பிரதிபலித்துள்ளது. நாட்டு மக்கள் அனைவரும் நரேந்திர மோடி தலைமையிலான மக்கள் விரோத அரசின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். எனவே அவர்கள் நேர்மறை மாற்றத்தை தற்போது எதிர்பார்த்துள்ளனர்.
இந்த தேர்தல் முடிவுகள் நாட்டு மக்கள் எண்ணங்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இளைஞர்களின் எதிர்பார்ப்பாக ராகுல் திகழ்கிறார். தற்போதைய மோடி அரசின் போலி வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.