புது தில்லி: காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடகா முயற்சிக்கும் விவகாரத்தை அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் எழுப்பியதால், அவையில் அமளி ஏற்பட்டது.
மேக்கேதாட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்களின் அமளி காரணமாக நண்பகல் 12 மணி வரை மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்ட்து.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில், இன்று மேக்கேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி.க்கள் எழுப்பிய கோஷம் காரணமாக அமளி ஏற்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.