புது தில்லி: நுகர்வோர் ஆர்டர் செய்த உணவு பொருட்களை ஸொமாட்டோ ஊழியர் சாப்பிடும் விடியோ சமூக தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, புதிய டெக்னிக் அறிமுகமாகியுள்ளது.
இருந்த இடத்தில் இருந்து கொண்டே பல்வேறு உணவகங்களில் இருந்து உணவுப் பொருட்களை வாங்க உதவும் ஸொமாட்டோ மூலம் ஆர்டர் செய்த உணவு பொருளை, அதனை டெலிவரி செய்யும் நபர் ஒருவர், சாலையோரம் நின்று சாப்பிடும் காட்சி வைரலானது.
இந்த நிலையில், மதுரையில் நடந்திருக்கும் இந்த சம்பவம் குறித்து ஸொமாட்டோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், உணவுப் பொருட்களை பிரிக்காமல் கொண்டு வரும் வகையில் டேம்பர் - ப்ரூஃப் டேப்களைப் பயன்படுத்தப் போவதாகவும், நுகர்வோருக்கான சேவையில் எந்த சகிப்புத் தன்மையும் இருக்காது என்றும் ஸொமாட்டோ கூறியுள்ளது.