காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கு இடையே நடைபெற்ற சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டத்தில் உள்ள சோப்புர் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நேற்று முதல் துப்பாக்கிச் சண்டை நடந்து வந்தது. நீண்ட நேர துப்பாக்கிச்சண்டைக்கு பிறகு இன்று காலை 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மேலும் அங்கு பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா என தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.