கர்நாடகாவில் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து 6 பேர் பலி: 5 பேர் காயம்

கர்நாடக மாநிலம், பகல்கோட் மாவட்டம், முதோல் என்ற இடத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததில் ஆலையில் பணியில் இருந்த 6
கர்நாடகாவில் சர்க்கரை ஆலை பாய்லர் வெடித்து 6 பேர் பலி: 5 பேர் காயம்

பெங்களூரு: கர்நாடக மாநிலம், பகல்கோட் மாவட்டம், முதோல் என்ற இடத்தில் உள்ள சர்க்கரை ஆலையில் பாய்லர் வெடித்ததில் ஆலையில் பணியில் இருந்த 6 பேர் உயிரிழந்தனர், 5 பேர் காயமடைந்துள்ளனர். 

கர்நாடக மாநிலம், பகல்கோட் மாவட்டம், முதோல் என்ற இடத்தில் உள்ள நிரானி என்ற சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில், இன்று காலை திடீரென கொதிகலன் வெடித்து விபத்திற்குள்ளானது. இதில், பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த சர்க்கரை ஆலை முன்னாள் அமைச்சர் முர்கேஷ் நிரானிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com