புதுச்சேரி: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியின் டிவிட்டர் கணக்கு சமூக விரோதிகளால் முடக்கபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருப்பவர் முன்னாள் காவல்துறை அதிகாரியான கிரண் பேடி. மாநில அரசுக்கும் இவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்நிலையில் தனது டிவிட்டர் கணக்கு சமூக விரோதிகளால் முடக்கப்பட்டுள்ளதாக கிரண் பேடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரை தனது வாட்ஸப்பில் வெளியிட்டுள்ள தகவலில் கூறியுள்ளதாவது:
எனது டிவிட்டர் கணக்கு முடக்கபட்டுள்ளது. சமூக விரோதிகள் யாரோ இச்செயலில் ஈடுப்பட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். மீட்கும் நடவடிக்கையிலிருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.