இலங்கை சிறைகளில் உள்ள 113 தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடித்தாகக் கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி கைது செய்து வருகிறது. அவ்வாறு கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறைகளில் உள்ள மீனவர்களில் 113 தமிழக மீனவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படவுள்ளனர்.
மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக சம்மந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு அந்நாட்டு சட்டத்துறை பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இம்மாத இறுதியில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்தியா வருவதையொட்டி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.