தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவிலும் உயர்கிறது பேருந்து கட்டணம்

கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்திக் கொள்ள மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.


திருவனந்தபுரம்: கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்திக் கொள்ள மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.

பேருந்து கட்டணத்தை உயர்த்தாவிட்டால், பிப்ரவரி 16ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தனியார் பேருந்து நிறுவனங்கள் கூறியதை அடுத்து, பேருந்து கட்டணத்தை உயர்த்த மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதையடுத்து, சாதாரண பேருந்துகளுக்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ.7ல் இருந்து ரூ.8 ஆக உயர்த்தப்பட உள்ளது. வேகப் பேருந்துகளுக்கான கட்டணம் ரூ.10ல் இருந்து ரூ.11 ஆகவும், சூப்பர் எக்ஸ்பிரஸ் பேருந்துகளில் ரூ.13ல் இருந்து ரூ.15 ஆகவும் உயர்ந்துள்ளது. மாணவர்களுக்கான கட்டணச் சலுகையில் மாற்றம் செய்யப்படவில்லை.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com