குறட்டை விடுபவரா நீங்கள்? ரயில் பயணத்தின் போது இப்படியும் நடக்கலாம்!

குறட்டை விட்ட ரயில் பயணியால் தங்கள் தூக்கம் பாதிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த சக பயணிகள் அவரை தூங்க விடாமல் செய்த சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது.
குறட்டை விடுபவரா நீங்கள்? ரயில் பயணத்தின் போது இப்படியும் நடக்கலாம்!

மும்பை: குறட்டை விட்ட ரயில் பயணியால் தங்கள் தூக்கம் பாதிக்கப்பட்டதால் அதிருப்தி அடைந்த சக பயணிகள் அவரை தூங்க விடாமல் செய்த சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது.

எல்டிடி-தர்பங்கா பவன் விரைவு ரயிலின் 3வது ஏசி வகுப்பில் பயணித்த ஒரு பயணிக்கு இதுபோன்ற ஒரு தர்மசங்கடமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, குறட்டை விடும் ரயில் பயணியால், சக பயணிகள் தூங்க முடியாமல் தவிப்பது வழக்கம். ஆனால், ஒரு விநோத சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது.

அதாவது, தர்பங்கா பவன் விரைவு ரயிலின் 3வது ஏசி வகுப்பில் பயணித்த ஒரு பயணி சத்தமாகக் குறட்டை விட்டு தூங்கியிருக்கிறார். இதனால் தங்களது தூக்கத்தைத் தொலைத்த சக பயணிகள், ஒரு முடிவு செய்தனர்.

அதாவது அந்த பயணியை எழுப்பி, தாங்கள் அனைவரும் தூங்கும் வரை அவர் தூங்கக் கூடாது என்றும், அவரது குறட்டை சத்தத்தால் தங்களது தூக்கம் கலைவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டது. ஆனாலும் சக பயணிகளின் அதிருப்தியால் அந்த பயணி 6 மணி நேரத்துக்கும் மேலாக உறங்காமலேயே பயணம் செய்துள்ளார். 

இந்த தகவலை அந்த ரயிலில் டிக்கெட் பரிசோதகராக பணியாற்றியவரும் உறுதி செய்துள்ளார். ஆனால் இது குறித்து பாதிக்கப்பட்டவர் எந்த புகாரும் கூறவில்லை என்றும் தெரிவித்தார்.

பொதுவாக ரயில்களில் குறட்டை விட்டு தூங்கும் பயணி குறித்து சக பயணிகள் புகார் கூறுவது வழக்கமான ஒன்றுதான். இதில், குறட்டை விட்ட பயணியை தூங்கக் கூடாது என்று சக பயணிகள் கூறியதை முதலில் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. பிறகு அனைவரும் வற்புறுத்திக் கூறியதால் ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com