பிகார் மாநிலம் முசாஃபர் நகர் பகுதியில் இயங்கி வரும் பள்ளிக்குள் அதிவேகமாக வந்த கார் மோதியதில் 9 மாணவர்கள் உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்தனர்.
பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்ல வாயிலை அடைந்த போது, அங்கே எதிர்பாராத வகையில் வேகமாக வந்த மகிந்தரா பொலெரோ வாகனம் மாணவர்கள் மீது பயங்கரமாக மோதியது. இதில் 9 மாணவர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
காயமடைந்த 24 மாணவர்களும் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு பிகார் அரசு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.