தி பீஸ் இண்டர்னேஷனல் பள்ளியின் மேலாண் இயக்குநர் எம்.எம்.அக்பரை ஹைதராபாதில் குடிவரவுத் துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
முஸ்லிம்கள் மத்தியில் வெறுப்பூட்டும் வகையில் பேசிய ஜாஹிர் நாயக் போல், கேரளத்தின் ஜாஹிர் நாயக் என்று இவர் அழைக்கப்படுகிறார்.
வெறுப்பூட்டும் வகையில் பேசி மத வன்முறையைத் தூண்டியதாக கேரள போலீஸாரால் கடந்த 2016-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில், இவரை ஹைதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். ஹைதராபாத் நகர போலீஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கேரள போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அவர்களிடம் அக்பர் திங்கள்கிழமை ஒப்படைக்கப்படுவார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.