ஜம்மு - காஷ்மீர் மாநிலம், உரி செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி அமைந்துள்ள இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து, பாகிஸ்தான் படைகள் வெள்ளிக்கிழமை அத்துமீறி தாக்குதல் நடத்தின.
ஜம்மு - காஷ்மீர் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாகிஸ்தான் படைகள் அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றன. இதற்கு, இந்திய தரப்பில் தக்க பதிலடி தரப்படுகிறது.
இந்நிலையில், உரி செக்டாரின் கமல்கோட் பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி அமைந்துள்ள இந்திய ராணுவ நிலைகளைக் குறிவைத்து, பாகிஸ்தான் படைகள் வெள்ளிக்கிழமை அதிகாலை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், 'பாகிஸ்தான் படையினரின் துப்பாக்கிச்சூட்டில் யாரும் உயிரிழந்ததாகவோ, காயமடைந்ததாகவோ இதுவரை தகவல் இல்லை. இத்தாக்குதலுக்கு இந்திய ராணுவ தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது' என்றார்.