மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து: 4 மாணவர்கள் பலி

மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 மாணவர்கள் பலியாகினர். 25 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து விபத்து: 4 மாணவர்கள் பலி

மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்த விபத்தில் 4 மாணவர்கள் பலியாகினர். 

மகாராஷ்டிரா மாநிலம், பல்கர் மாவட்டத்தில் உள்ள தஹானு என்ற பகுதியில் 40 பேருடன் கடலுக்குள் சென்ற படகு இன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 

தகவலறிந்த கடலோரக் காவல் படையினர் மீட்புத் துறையினரின் உதவியோடு 25 மாணவர்களை பத்திரமாக மீட்டுள்ளனர். இருப்பினும் இவ்விபத்தில் 4 மாணவர்கள் பலியாகினர். 

ஏனைய மாணவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிக பாரம் காரணமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாணையில் தெரிய வந்துள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com