மும்பையில் ஓ.என்.ஜி.சிக்கு சொந்தமான ஹெலிகாப்டர் மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை ஜுஹு விமான நிலையத்தில் இருந்து எண்ணெய் துரப்பண மேடைக்கு சென்ற ஹெலிகாப்டர் இன்று மாயமானது. இதையடுத்து 7 பேருடன் மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மும்பையில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் சென்றபோது ஹெலிகாப்டரின் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.