காஷ்மீரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது.
காஷ்மீரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழப்பு

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது.
ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தி வருகின்றனர். சோபோரில் கடந்த 6ஆம் தேதி பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் போலீஸார் 4 பேர் பலியாகினர்.
இதை கருத்தில் கொண்டு, ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை தீவிர சோதனை நடத்தினர். ஸ்ரீநகர்-பாரமுல்லா நெடுஞ்சாலையில் சோதனை நடத்தியபோது, சக்திவாய்ந்த வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 
இதையடுத்து, அந்தப் பகுதியை சீலிட்ட பாதுகாப்புப் படையினர், போக்குவரத்தையும் வேறு பாதையில் திருப்பி விட்டனர். இதைத் தொடர்ந்து, தகுந்த முன்னெச்சரிக்கையுடன் அந்த வெடிகுண்டை பாதுகாப்புப் படையினர் செயலிழக்கச் செய்தனர்.
அந்த வெடிகுண்டு சுமார் 5 கிலோ எடை கொண்டதாகும். மிகவும் சக்திவாய்ந்த கருதப்படும் அந்த வெடிகுண்டு வெடித்திருந்தால், மிகப்பெரிய அளவில் சேதம் ஏற்பட்டிருக்கும். அதற்கு முன்பு வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டு விட்டதால், பெரும் அசம்பாவிதம் நிகழ்வது தவிர்க்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com