சரத்பிரபு தற்கொலை செய்து இருக்கலாம் என்று தில்லி போலீசார் கூறியுள்ளனர்.
தில்லி யூசிஎம்எஸ் மருத்துவ கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பை படித்து வந்த திருப்பூரை சேர்ந்த மருத்துவ மாணவர் சரத்பிரபு அவரது அறையில் உள்ள கழிவறையில் மர்மமான முறையில் இன்று இறந்து கிடந்தார். அவரது மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதேசமயம், சரத்பிரபு இறப்பில் மர்மம் இருப்பதாக அவரது உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இதனிடையே சரத்பிரபு ஊசி மூலம் பொட்டாஷியம் குளோரைடை செலுத்தி தற்கொலை செய்து இருக்கலாம் என்று தில்லி போலீசார் தெரிவித்துள்ளார்.
மேலும் சரத்பிரபு சடலமாக மீட்கப்பட்ட கழிவறையில் ஊசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்றும் கழிவறைக்கு வெளியே பொட்டாஷியம் குளோரைடு கண்டெடுக்கப்பட்டது என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.