புது தில்லி: திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது.
தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி செய்தியாளர்கள் முன்னிலையில் தேர்தல் தேதிகளை அறிவித்தார்.
திரிபுரா சட்டப்பேரவையின் பதவிக் காலம் வரும் மார்ச் 14ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பிப்ரவரி 18ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அதே சமயம், மேகாலயா சட்டப்பேரவையின் பதவிக் காலம் மார்ச் மாதம் 6ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், மேகாலயா மற்றும் நாகலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
நாகலாந்து சட்டப்பேரவையின் பதவிக் காலம் மார்ச் 13ம் தேதியுடன் நிறைவடைகிறது.
3 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் மார்ச் 3ம் தேதி எண்ணப்படும் என்றும், அன்றைய தினமே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்தார்.