காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இருத் தரப்பிலும் உயிர்சேதம் ஏற்படுகிறது.
இந்நிலையில் காஷ்மீர் மாநிலம், ஆர்.எஸ்.புரா பகுதியில் உள்ள கிராமங்களை பாகிஸ்தான் ராணுவம் இன்று அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதில் பொதுமக்கள் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.