பாஜகவுடன் கூட்டணி முறிவு; 2019 தேர்தலை தனியாக சந்திக்க சிவசேனா முடிவு

2019ம் ஆண்டில் நடைபெறும் மக்களவை தேர்தலையும், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலையும் தனியாகவே சந்திப்பது என்று சிவசேனா முடிவு செய்துள்ளது.
பாஜகவுடன் கூட்டணி முறிவு; 2019 தேர்தலை தனியாக சந்திக்க சிவசேனா முடிவு

மும்பை: 2019ம் ஆண்டில் நடைபெறும் மக்களவை தேர்தலையும், மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலையும் தனியாகவே சந்திப்பது என்று சிவசேனா முடிவு செய்துள்ளது.

இன்று நடைபெற்ற கட்சியின் தேசிய செயற்குழுக் கூட்டத்தில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் தத் இந்த தீர்மானத்தை முன்மொழிந்தார். இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் பாஜக கூட்டணி பல ஆண்டுகாலமாக நீடித்து வந்த நிலையில், மத்திய அரசிலும், மாநிலத்திலும் இந்த கூட்டணி இன்று ஒரு சேர முடிவுக்கு வந்துள்ளது.

சமீபகாலமாக பாஜகவை சிவசேனா வெளிப்படையாகவே விமரிசித்து வந்த நிலையில், இரு கட்சிகளுக்கு இடையே விரிசல் ஏற்பட்டிருப்பது இன்று நிரூபணமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com