துக்க வீட்டில் எடுத்த செல்பியால் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் 

கேரளாவில் கல்லூரித் தகராறு ஒன்றில் கொலை செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலைவர் வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்ற பொழுது எடுத்த செல்பியால், பிரபல மலையாள நடிகருக்கு கண்டனங்கள் குவிகிறது.
துக்க வீட்டில் எடுத்த செல்பியால் சர்ச்சையில் சிக்கிய பிரபல நடிகர் 

கொச்சி: கேரளாவில் கல்லூரித் தகராறு ஒன்றில் கொலை செய்யப்பட்ட மாணவர் சங்கத் தலைவர் வீட்டுக்கு ஆறுதல் கூறச் சென்ற பொழுது எடுத்த செல்பியால், பிரபல மலையாள நடிகருக்கு கண்டனங்கள் குவிகிறது  

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் இடுக்கி மாவட்டம் வட்டவடா பகுதியை சேர்ந்த அபிமன்யூ படித்து வந்தார். அவர் கல்லூரியில் உள்ள  இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராகவும் செயல்பட்டு வந்தார்.

அந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்க சுவர் விளம்பரம் செய்வதில் ஏற்பட்ட தகராறு ஒன்றின் காரணமாக, இன்னொரு மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகள் சிலர்  சேர்ந்து அபிமன்யூவை கொலை செய்து விட்டனர்.

மாணவர் அபிமன்யூ கொலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் நடிகரும், பாரதீய ஜனதா கட்சி எம்.பி.யுமான சுரேஷ்கோபி மாணவர் அபிமன்யூ வீட்டிற்கு நேரில் சென்று அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.

நடிகர் சுரேஷ்கோபி  வந்துள்ள தகவல் கிடைத்ததும் ஏராளமான ரசிகர்கள் அந்த வீடு முன்பு திரண்டனர். துக்கம் விசாரித்துவிட்டு வெளியில் வந்த சுரேஷ்கோபி ரசிகர்களை பார்த்ததும் அவர்களுடன் சிரித்தபடி செல்பி எடுத்துக்கொண்டார்.

இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் பரவி இது கேரளாவில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. துக்கம் விசாரிக்கச் சென்ற இடத்தில் சுரேஷ்கோபி செல்பி எடுத்ததற்கு அரசியல் கட்சிகளும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com