ஏழுமலையான் தரிசனம் நாளை 5 மணிநேரம் ரத்து

ஏழுமலையான் தரிசனம் நாளை 5 மணிநேரம் ரத்து

ஏழுமலையான் தரிசனம் வரும் செவ்வாய்க்கிழமை 5 மணிநேரத்துக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ஏழுமலையான் தரிசனம் வரும் செவ்வாய்க்கிழமை 5 மணிநேரத்துக்கு ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட 4 உற்சவங்களுக்கு முன் ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். 

அதன்படி வரும் ஜூலை 17ஆம் தேதி திருமலையில் ஆனிவார ஆஸ்தானம் எனப்படும் புதிய கணக்கு தொடங்கும் உற்சவம் நடைபெற உள்ளது. 

அதனால் அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமையான வரும் 10ஆம் தேதி ஏழுமலையான் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட உள்ளது. 

அதையொட்டி அன்று காலை 6 மணிமுதல் 11 மணிவரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

கோயில் சுத்தம் செய்யப்பட்ட பின் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com