மும்பை: மும்பையில் ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வந்த மழை இன்று சற்று இடைவெளி விட்டுள்ளது. காலை முதல் மழை ஓய்ந்திருப்பதால் வெள்ளம் வடியத் தொடங்கியது.
4 நாட்களாக பெய்த கன மழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட சாலைப் போக்குவரத்து தற்போது மெல்ல சீரடைந்து வருகிறது. காலை முதலே பயணிகள் ரயில்கள் பாதுகாப்புக் கருதி குறைந்த வேகத்தில் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 10 நாட்களில் மும்பை நகரில் சரியாக 864.5 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஒரு மாதம் முழுவதும் மும்பைக்குக் கிடைக்க வேண்டிய மழை அளவு 10 நாட்களில் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.