கொச்சி: கேரளாவில் முன்கணிக்கப்படாத மழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய முதற்கட்டமாக மத்திய அரசு ரூ.80 கோடியை ஒதுக்கீடு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
ரிஜிஜு தலைமையிலான மத்தியக் குழு, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சர் அல்போன்ஸ் கண்ணன்தானத்துடன் இன்று காலை கொச்சி வந்து சேர்ந்தது.
இந்த குழுவினர் கேரளாவில் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட உள்ளனர்.
வெள்ள நிலைமையை எதிர்கொள்ள மாநில அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் ரிஜிஜு கூறியுள்ளார்.