பாஜக மக்களை நேரில் சந்தித்து ஆட்சியின் முயற்சிகள் மற்றும் சாதனைகள் குறித்து கட்சி நிர்வாகிகள் விளக்கமளிக்க வேண்டும் என்ற பிரச்சார திட்டத்தை நடத்தி வருகிறது.
இந்த திட்டத்தின் சார்பாக ஒவ்வொரு பாஜக நிர்வாகியும் தலா 10 பேரையாவது நேரில் சந்தித்து ஆதரவு திரட்ட வேண்டும். அதன் பகுதியாக 2019 மக்களவை தேர்தலுக்கு முன் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா 50 பேரை சந்திக்கவுள்ளார்.
இந்த பிரச்சாரத்தின் பகுதியாக அமித்ஷா நாளை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவை அவரது வீட்டில் வைத்து சந்திக்கிறார்.
அமித்ஷா, இந்த பிரச்சாரத்தில் யோகா குரு ராம்தேவை திங்கள்கிழமை சந்தித்து ஆதரவு திரட்டினார்.