சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, லடாக் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இந்தோ-திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் சூர்யநமஸ்காரம் செய்தனர்.
சர்வதேச யோகா தினம் இன்று கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் யோகா பயிற்சிகளில் ஏராளமானோர் ஈடுபட்டனர்.
நாட்டு மக்களுடன் இணைந்து, யோகா தினத்தைக் கொண்டாடும் வகையில், பூமியில் இருந்து சுமார் 18,000 அடி உயரத்தில் பனிப் பாலைவனமாகக் காட்சியளிக்கும் லடாக் பகுதியில் எலும்பை உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், இந்தோ - திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.