காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒழுங்காற்றுக் குழு அமைத்து மத்திய அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையகம் புது தில்லியில் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் இருந்து செயல்படவுள்ளது.
மொத்தம் 9 உறுப்பினர்களைக் கொண்ட காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு மத்திய நீர் ஆணையத்தின் தலைவராக உள்ள மசூத் ஹுசைன் தலைவர் மற்றும் செயலாளராக ஏ.எஸ்.கோயல் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதில், தமிழகத்தின் தரப்பில் பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் மற்றும் நீர்வளத்துறை நிர்வாகத்தின் செயலர் (பொறுப்பு) எஸ்.கே.பிரபாகர், பகுதிநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஒழுங்காற்றுக் குழுவில் கர்நாடக உறுப்பினர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை.