ஜம்மு-காஷ்மீரில் இன்று அனைத்துக் கட்சி கூட்டம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் என்.என்.வோரா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நடைபெறவுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் என்.என்.வோரா தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 22) நடைபெறவுள்ளது.
அந்த மாநிலத்தில் ஆளுநர் ஆட்சி அமலுக்கு வந்துள்ள நிலையில், ஆளுநர் வோரா இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர். தேசியக் கட்சிகளின் மாநிலத் தலைவர்கள் உள்பட, அனைத்து கட்சிகளின் தலைவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் மக்கள் ஜனநாயகக் கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக விலக்கிக் கொண்டதை அடுத்து, அந்த மாநிலத்தில் ஆட்சி கவிழ்ந்தது. இதையடுத்து அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. மேலும், அந்த மாநில சட்டப்பேரவையும் முடக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com