கா்நாடக மாநிலம், சிக்கமகளூரில் பாஜக நிர்வாகி ஒருவா் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
பாஜவின் சிக்கமகளூா் பகுதி பொதுச் செயலாளராக இருந்தவா் அன்வா். சிக்கமகளூரில் வெள்ளிக்கிழமை இரவு அன்வா் சென்று கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 போ், அவரைக் கத்தியால் சரமாரியாக குத்தினா்.
இதில் பலத்த காயமடைந்த அன்வா், அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவா் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடா்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனா்.