மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை: வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது

நாடு முழுவதும் பெரும்பாலான நகரங்களில் வெப்பச் சலனம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே புழுதிப் புயல் ஏற்படுகிறது.
மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை: வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது

நாடு முழுவதும் பெரும்பாலான நகரங்களில் வெப்பச் சலனம் காரணமாக கனமழை பெய்து வருகிறது. ஆங்காங்கே புழுதிப் புயல் ஏற்படுகிறது.

இந்நிலையில், புவனேஸ்வர், மும்பை, ஹைதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. 

சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. வீடுகளிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் அடுத்த 2 தினங்களுக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக ஒடிஸாவின் பெரும்பாலான பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com