நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் வரும் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் தெரிவித்தார். இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் உள்ளிட்ட பல மசோதாக்களை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பெரும்பாலான நாட்கள் காவிரி விவகாரம், ஆந்திர மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பிரச்னைகளால் முடங்கப்பட்டது. அதனால், இந்த கூட்டத்தொடர் மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
இந்த கூட்டத்தொடர் எந்தவித அமளியும் இல்லாமல் நடைபெற எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை அரசு கோரியுள்ளது.