தெலங்கானா மாநிலத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 14 பெண்களும், ஒரு குழந்தையும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது:
யதாரா மாவட்டத்துக்கு அருகே உள்ள லஷ்மாபுரம் என்ற கிராமத்தில் டிராக்டரில் 20-க்கும் மேற்பட்டோர் ஞாயிற்றுக்கிழமை சென்றகொண்டிருந்தனர்.
அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக டிராக்டரை திருப்பியபோது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது.
டிராக்டரில் இருந்த 14 பெண்களும், ஒரு குழந்தையும் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தப்பியோடிய டிராக்டர் ஓட்டுநரை போலீஸார் தேடி வருகின்றனர் என்று போலீஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இரங்கல் தெரிவித்தார்.