அயோத்தி ராமர் கோவிலில் ஜெயேந்திரருக்கு சிலை? சுப்ரமணிய சுவாமியின் புது கணக்கு! 

அயோத்தியில் ராமர் கோயில் புதியதாக கட்டப்படும் பொழுது அங்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிலையை வைக்க வலியுறுத்துவேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துளார்.
அயோத்தி ராமர் கோவிலில் ஜெயேந்திரருக்கு சிலை? சுப்ரமணிய சுவாமியின் புது கணக்கு! 

புதுதில்லி: அயோத்தியில் ராமர் கோயில் புதியதாக கட்டப்படும் பொழுது அங்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிலையை வைக்க வலியுறுத்துவேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துளார்.

காஞ்சி காமகோடி பீடத்தின் 69-வது மடாதிபதியான ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கடந்த மாதம் 28-ந்தேதி காலையில் மூச்சுத் திணறலால் மரணமடைந்தார். இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோயில் புதியதாக கட்டப்படும் பொழுது அங்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிலையை வைக்க வலியுறுத்துவேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி தெரிவித்துளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

அயோத்தியில் ராமர் கோயில் புதியதாக கட்டப்படும் பொழுது, அங்கு ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் சிலையை வைக்க வலியுறுத்துவேன்.  ராமஜென்ம பூமி விவகாரத்தில் அவருடைய பங்கை நினைவு கூறம் வகையில் அது அமையும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com