பாட்னா: பிகார் மாநிலத்தின் அராரியா மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி துவங்கி 3 நேரத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
மேலும், பிகார் மாநில சட்டப்பேரவைத் தொகுதியான பபுவாவிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை வகிக்க, ஜெகானாபாத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான கூட்டணி வேட்பாளர் முன்னிலையில் உள்ளார்.
அராரியா மக்களவை தொகுதியில் பாஜக வேட்பாளர் பிரதீப் குமார் சிங் 8,979 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
பபுவா சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரிங்கி பாண்டே 3,252 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
ஜெகானாபாத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தள வேட்பாளர் சுதே யாதவ் 15 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார். இன்று பிற்பகலில் தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.